தொடரை வென்ற இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு அணியின் ஸ்பின்னர்கள் ஆர் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் முக்கிய காரணங்களாக விளங்கினர்.
கூட்டாக 59 விக்கெட்டுகள்
இருவரும் இணைந்து இந்த தொடரில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். காயம் காரணமாக அக்சர் படேல் முதல் போட்டியில் பங்கேற்காத நிலையிலும் அடுத்த போட்டிகளில் விக்கெட்டுகளை குவிக்க தவறவில்லை. 3வது போட்டியில் மட்டும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அக்சர் படேல்.
கலாய்த்த ரிக்கி பாண்டிங்
ஆர் அஸ்வின் மட்டுமே 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் 2021 தொடரில் ஆர் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய 3 பேரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர். இந்நிலையில், அக்சர் மற்றும் அஸ்வின் இருவரும் ஐபிஎல்லிற்காகவும் விக்கெட்டுகளை வைப்பார்கள் என்று தான் நம்புவதாக அந்த அணியின் தலைமை கோச் ரிக்கி பாண்டிங் கலாய்த்துள்ளார்.
பாண்டிங் ஆவல்
மேலும் அணியின் ரிஷப் பந்த்தும் கடந்த போட்டியில் சதமடித்திருந்த நிலையில், அவரும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல்லிலும் தொடர்வார் என்றும் அதை பார்க்க தான் ஆவலுடன் உள்ளதாகவும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.