துபாய் : நேற்றைய சிஎஸ்கே -கேகேஆர் அணிகளுக்கிடையிலான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட அதிரடியாக விளையாடி 31 ரன்களை குவித்தார் ரவீந்திர ஜடேஜா.
இந்நிலையில், குதிரைகள் மீது ஆர்வம் கொண்ட ஜடேஜாவை குறிப்பிடும்வகையில், குதிரை மனிதனின் அதிரடி ஆட்டம் என்று இந்திய தலைமை கோச் ரவி சாஸ்திரி டிவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்றைய சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையிலான ஐபிஎல்லின் 49வது லீக் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்ற பெற்றதற்கு அந்த அணியின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காரணமாக அமைந்தனர். முக்கியமாக இறுதி 2 பந்துகளில் 2 அதிரடி சிக்ஸ்களை அடித்த ஜடேஜாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
2 பேரால்தான் இப்படி ஒரு கதி.. தினேஷ் கார்த்திக் எடுத்த முடிவு.. கலக்கத்தில் ஷாருக்.. என்ன நடந்தது?
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை கோச் ரவிசாஸ்திரியும் ஜடேஜாவிற்கு தனது டிவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். குதிரைகள் மீது ஆர்வம் கொண்ட ஜடேஜாவை குதிரை மனிதனின் அதிரடி ஆட்டம் என்று குறிப்பிட்டு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.