கேப்டன் ஆனார்
தோனி 2007இல் இந்திய அணிக்கு கேப்டன் ஆனார். முதலில் டி20அணிக்கு கேப்டன் ஆனார். டி20 உலகக்கோப்பை தொடரில் கேப்டன் ஆக அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதோடு, கேப்டனாக உலகக்கோப்பை வெல்லவும் காரணமாக இருந்தார்.
கேப்டனாக தோனி
தொடர்ந்து ஒருநாள் அணிக்கும், பின்னர் டெஸ்ட் அணிக்கும் கேப்டன் ஆனார் தோனி. கேப்டனாக தோனியின் கள செயல்பாடுகள் வெகுவாக பாராட்டப்பட்டவை. குறிப்பாக பந்துவீச்சாளர்களை அவர் கையாளும் விதம், அவர்களுக்கு யோசனை சொல்வது போன்றவை குறித்து பல வீரர்களும் கூறி உள்ளனர்.
உற்சாகம்
இந்த நிலையில், தோனி கேப்டன்சியின் துவக்கம் முதல் அணியில் இடம் பெற்று வந்த இர்பான் பதான் அது பற்றி பேசி உள்ளார். 2007இல் முதன் முறையாக கேப்டன் பதவி என்ற பெரிய பொறுப்பை அளித்த போது தோனி மிகுந்த உற்சாகம் அடைந்ததாக கூறினார்.
அணிக் கூட்டம்
2007 மற்றும் 2013 சாம்பியன் ட்ராபி தொடர்களின் போது அணி கூட்டம் மிகவும் சிறியதாகவே இருக்கும். வெறும் 5 நிமிடம் தான் கூட்டம் நடக்கும் என்றார் இர்பான் பதான்.கடைசி வரை தோனி நடத்திய அணிக் கூட்டங்கள் எல்லாமே சிறியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் எந்த மாற்றமும் செய்யவில்லை.
ஓடிச் செல்வார்
ஆனால், ஒரு விஷயம் பெரிய அளவில் மாறியது. 2௦07இல் உற்சாகம் காரணமாக விக்கெட் கீப்பிங் முனையில் இருந்து, பந்துவீச்சாளர் முனைக்கு ஓடிச் சென்று பந்துவீச்சாளரை கட்டுப்படுத்த முயல்வார். ஆனால், 2013இல் அவர் பந்துவீச்சாளர்களை அவர்களே தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள விட்டுவிட்டார் என்றார் பதான்.
இவர்களை நம்பினார்
மேலும், 2007இல் இருந்து 2013க்குள் மித வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களை அவர் நம்பத் துவங்கியதாகவும் கூறினார் இர்பான் பதான். சாம்பியன்ஸ் டிராபியில் முக்கிய நேரங்களில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி போட்டிகளை வென்றதாகவும் குறிப்பிட்டார்.
விக்கெட் வேட்டை
தோனி சுழற் பந்துவீச்சாளர்களுக்கு யோசனை கூறி விக்கெட் வேட்டை நடத்துவதில் சிறந்து விளங்குகிறார். இதைப் பற்றி பலரும் கூறி உள்ள நிலையில், இர்பான் பதான் அந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது என தான் அருகே இருந்து பார்த்ததை கூறி உள்ளார்.