விதிகள் என்ன?
ஹால் ஆப் பேம் என்ற கவுரவத்தை 2009ம் ஆண்டு முதல் அளித்து வருகிறது. பட்டியலில் இடம்பெற பேட்ஸ்மேன் ஒருவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8,000 ரன்கள் மற்றும் 20 சதங்கள் அடித்திருக்கவேண்டும்.
200 விக். வேண்டும்
அதேபோல பவுலராக இருந்தால் அவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் குறைந்தது 200 விக்கெட்டுகள் எடுத்திருக்கவேண்டும். இந்த விக்கெட்டுகளை ஒருநாள் போட்டி என்றால், 30 ஸ்டிரைக் ரேட்டுடனும் டெஸ்ட் என்றால் 50 ஸ்டிரைக் ரேட்டுடனும் எடுத்திருக்கவேண்டும்.
5 ஆண்டுகள் நிறைவு
மேலும் பட்டியலுக்கு தேர்வாக வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் முடிந்து இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் படி இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவருமே தேர்ச்சி பெறுவர்.
எப்படி வந்தார் டிராவிட்?
ஆனால், பட்டியலில் ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும். சச்சினுக்கு முன் டிராவிட் தேர்வானார். அதற்கு காரணம், அவர் 2012ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், சச்சின் ஓராண்டு கழித்து 2013ம் ஆண்டு தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். எனவே சச்சினுக்கு முன்பு டிராவிட் பட்டியலில் இடம் பிடித்தார்.
யார்? யார்?
இந்த பட்டியலில் உலக அளவில் 87 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து 28 பேர், ஆஸ்திரேலியாவிலிருந்து 26 பேர் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து 18 பேரும், பாகிஸ்தானிலிருந்து 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவிலிருந்து 3 பேரும், இலங்கையிலிருந்து ஒருவரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.