ரமேஷ் பவார் பதவி
மகளிர் கிரிக்கெட்டில் உலக டி20யின் போது மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாத விவகாரம் பெரிதானது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் காரணம் என கூறப்பட்டது. அவரது பதவிக் காலமும் முடிந்த நிலையில், அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடைமுறைகள் துவங்கி உள்ளது.
கேப்டன் - துணை கேப்டன் வேண்டுகோள்
டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் ரமேஷ் பவார் தான் கேப்டனாக வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினர். ஆனாலும், இதற்கு ஒரு சிலர் தவிர பிசிசிஐ அதிகாரிகள் மட்டத்தில் எதிர்ப்பு உள்ளது.
விராட் கோலி - கும்ப்ளே விவகாரம்
ரமேஷ் பவாருக்கு ஆதரவாக இருந்து வரும் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி, கோலி எப்படி அனில் கும்ப்ளேவை நீக்கிவிட்டு, தனக்கு பிடித்த ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்துக் கொண்டாரோ, அதே போல தான் மகளர் கிரிக்கெட்டிலும் நடக்கிறது. அதிலும் கோலி போல ரகசியமாக அல்லாமல், மகளிர் கிரிக்கெட் அணியினர் வெளிப்படையாக மெயில் அனுப்பி தங்கள் ஆதரவை ரமேஷ் பவாருக்கு அளித்துள்ளனர் என கூறியுள்ளார்.
வெளியான உண்மை இது தான்
இந்த இடத்தில் தான் ஒரு ரகசியத்தை உடைத்தார் டயானா. கோலி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரிக்கு விடாமல் எஸ்எம்எஸ் அனுப்பி அனில் கும்ப்ளேவை நீக்க வைத்து, பின்னர் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்துக் கொண்டார். அதில் பல விதி மீறல்களும் இருந்தன என உண்மையை போட்டு உடைத்தார். இதன் மூலம், அனில் கும்ப்ளேவை நீக்க கோலி எந்த அளவிற்கு வேலை செய்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
கும்ப்ளே வில்லன் ஆனார்
"அந்த சமயத்தில் அனில் கும்ப்ளேவை வில்லன் போல சித்திரித்து வெளியேற்றினார்கள். அப்போது, அனில் கும்ப்ளே பெருந்தன்மையுடன் தாமாகவே முன்வந்து பதவி விலகினார்" எனவும் டயானா குறிப்பிட்டுள்ளார்.
ரமேஷ் பவார் தான் வரணும்
இந்த உதாரணத்தை வைத்து ரமேஷ் பவார் தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும். கோலி எப்படி ரவி சாஸ்திரியை விரும்பினாரோ, அதே போல டி20 கேப்டன் மற்றும் துணை கேப்டனின் விருப்பமான ரமேஷ் பவாரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.