உலகக் கோப்பைக்கு சமம்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், மயங்க் அகர்வால், சத்தேஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே(துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில், இந்திய வேகப்பந்துவீச்சு கூட்டணியை பும்ரா தலைமையேற்று நடத்தவிருக்கிறார். உலகின் டாப் பவுலர்களில் ஒருவராக பும்ராவுக்கு இது நிச்சயம் சவாலான களமாக இருக்கப் போகிறது. ஏனெனில், இது சாதாரண டெஸ்ட் தொடர் மட்டுமல்ல, முதன் முறையாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி. கிட்டத்தட்ட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இணையானது.
ஓரே ஆறுதல்
முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா போன்றொர் கிரிக்கெட்டில் பும்ராவுக்கே சீனியர்ஸ் என்றாலும் செயல்திறன் அடிப்படையில் இன்று பும்ரா தான் டாப். ஸோ, சந்தேகமே இன்றி, ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணியை வழிநடத்தப் போவது அவர் தான். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2- 0 என்று வாஷ் அவுட் ஆனது. அதில், பும்ரா 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் தான் இந்தியா இரண்டு போட்டியிலும் தோற்றது. ஆனால், இப்போது இந்தியா வசமிருக்கும் ஒரே ஆறுதல் போட்டி நியூசிலாந்தில் நடக்கவில்லை என்பதுதான்.
ஏகப்பட்ட சவால்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரிஸ் பவுலிங் க்ளிக் ஆனதை, இப்போது மீண்டும் சவுத்தாம்ப்டனில் பும்ரா க்ளிக் ஆக வைக்க வேண்டும். தனக்கு மட்டுமின்றி, மற்ற பவுலர்கள் பொட்டென்ஷியலையும் அவர் வெளிக்கொண்டு வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் மூச்சைப் போட்டு பந்துவீசுவதற்கு சப்போர்ட் செய்யும் விதமாக, இந்திய பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட வேண்டும். இப்படி பும்ரா முன் ஏகப்பட்ட சவால் காத்திருக்கிறது.
தல சுத்துதே
அதுமட்டுமல்ல.. கடந்த டிசம்பர் - ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, பும்ரா பிரிஸ்பேன் டெஸ்ட்டில் விளையாடவில்லை. அந்த காயம் க்ளீயர் ஆனா பிறகே, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட்டில் கலந்து கொண்டார். அப்போது கூட வர்ணனையாளர்கள், 'இவ்வளவு சீக்கிரம் பும்ரா அணியில் இணைந்து விளையாடி இருக்கக் கூடாது.. இன்னமும் ஓய்வு தேவை' என்றனர். அதன்பிறகு ஐபிஎல் என்று அவர் சகஜமாகிவிட்டாலும், மீண்டும் பும்ரா காயத்தில் சிக்கிவிடக் கூடாது. ஏனெனில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் உள்ளது. அனைத்துக்கும் லீடிங் பும்ரா தான். அப்படியெனில், அவரைச் சுற்றி எத்தனை பிரஷர் பாருங்கள். (இப்பவே தல சுத்துதே!).
ஒர்க் அவுட் ஆகுமா?
எனினும், பும்ராவின் தற்போதைய கூல் மோட் அவரது புது மனைவி சஞ்சனா கணேசன். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளினியான சஞ்சனாவும், கணவர் பும்ராவுடன் இங்கிலாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செல்லும் பட்சத்தில், பும்ராவின் ஐபிஎல் டீம் கேப்டனை போல், மனைவி ராசி ஒர்க் அவுட் ஆகிறதா என்று பார்ப்போம்.