கபில் தேவ் குழு
பலரும் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான தேர்வுக்குழு புதிய பயிற்சியாளர்களை ஆலோசித்து தேர்வு செய்ய உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு முன்பாக மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் கோலி. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அதில்கலந்து கொண்டார்.
கோலியிடம் கேள்வி
அப்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வருவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோலி பதில் கூறுகையில், இந்திய அணியின் கிரிக்கெட் ஆலோசனை குழு அது குறித்து முடிவு செய்யும்.
இதுதான் எனது முடிவு
ஆனால் அவர்கள் இதுவரை என்னிடம் இது தொடர்பான எனது விருப்பத்தை கேட்க வில்லை. அவர்கள் கேட்டால் நிச்சயம் என்னுடைய முடிவு குறித்து நான் பேசுவேன்.
ரவி சாஸ்திரி வேண்டும்
தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமானால், ரவி சாஸ்திரியே மீண்டும் இந்த பதவிக்கு வந்தால் நன்றாக இருக்கும். நானும் அவரும் அணியின் முன்னேற்றம் குறித்தும், இக்கட்டான சூழலில் முடிவு குறித்தும் நிறைய பகிர்ந்திருக்கிறோம்.
நல்ல நட்பு
நல்ல நட்பு எங்களிடையே இருக்கிறது. மற்ற வீரர்களும் ரவிசாஸ்திரி உடன் நல்ல அணுகு முறையில் உள்ளனர். இது குறித்து நான் பேசுவதற்கு வேறொன்றுமில்லை. விரைவில் விண்ணப்பங்கள் பெற்று, யார் பயிற்சியாளர் என்பதை தேர்வு குழு முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.