சோமர்செட் அணி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் முரளி விஜய் இடம்பெறவில்லை. இந்நிலையில், நடப்பு சீசனில் 3 போட்டிகளுக்காக சோமர் செட் அணியில் விளையாட பாகிஸ்தான் வீரர் அசார் அலிக்கு பதிலாக ஒப்பந்தமாகியுள்ளார்.
பேஷனுக்காக ஆட்டம்
எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். ஆர்வம் மற்றும் பெருமைக்காக தான் கிரிக்கெட் ஆடுகிறேன். மிகப்பெரிய பங்களிப்பை எனது போட்டிகளில் கொடுத்து வருகிறேன். எந்த அணியாக இருந்தாலும் எனது பங்களிப்பை சிறப்பாக கொடுப்பேன்.
ரோகித் விளையாடுவார்
அணியை விட யாரும் சிறந்தவர்கள் அல்ல. அது கேப்டன் விராட் கோலியா இல்லையா என்பது அல்ல. யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ரோகித் சர்மா அணிக்காக மட்டுமல்லாமல் நாட்டிற்காக விளையாடுவார்.
எதிர்பார்க்கிறேன்
என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் விளையாட்டில் இதை தான் செய்தேன். இதனால் எந்த மாற்றமும் நிகழாது என்பது நன்றாகவே தெரியும். ஆனால் வாய்ப்பு தான் ஒரு சிறந்த அனுபவத்தை தரும், அதை தான் எதிர்பார்க்கிறேன் என்றார்.