டெஸ்ட் அணியில் சாஹா
அதை சரியாக பயன்படுத்தினார் ரிஷப் பண்ட். சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விட்டதால் சாஹாவிற்கு மீண்டும் இடம் கிடைக்குமா? என்ற நிலை உள்ளது.
டி 20 தொடர்
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்த சாஹா, சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் களம் இறங்கினார். ஒரு ஆட்டத்தில் சதம் அடித்து திறமையை அவர் நிரூபித்தார்.
தொடக்க வீரர் சாஹா
ஐபிஎல் 2019 சீசன் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள சாஹா, அந்த அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
பேட் செய்ய விருப்பம்
இதுகுறித்து அவர் கூறியதாவது:உண்மையிலேயே நான் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி பேட் செய்வதை விரும்புகிறேன். விக்கெட் கீப்பர்களும் இப்போது நன்றாக பேட் செய்ய வேண்டும்.
முக்கியமான தொடர்
ஆனால், இந்த முடிவை அணி நிர்வாகம்தான் எடுக்க வேண்டும். பல மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறேன். நடப்பு ஐபிஎல் தொடர் எனக்கு மிக முக்கியமான தொடராகும் என்றார்.