நுணுக்கங்கள் தெரியும்
இந் நிலையில் அணி நிர்வாகம் ஒத்துக்கொண்டால், 4ம் வரிசையில் தாம் இறங்க தயாராக இருப்பதாக கே எல் ராகுல் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: தற்போது மிடில் ஆர்டர் பேட்டிங் நுணுக்கங்களை நன்கு அறிந்து வைத்துள்ளேன். எந்த வரிசையிலும் தான் களமிறங்க தயாராக உள்ளேன்.
சிறந்த பேட்டிங்
தேர்வுக்குழு ஒரு முடிவெடுத்துவிட்டு தான் என்னை அணியில் தேர்வு செய்துள்ளனர். அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களமிறக்க முடிவு செய்தாலும், அந்த வரிசையில் களமிறங்கி சிறப்பாக ஆடுவேன். கடைசி 2 மாதங்களாக என்னுடைய சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளேன்.
நம்பிக்கை இருக்கிறது
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டி என்னுடைய பேட்டிங் மீது அதிக கவனம் செலுத்த தூண்டியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன். அதுவே முழு நம்பிக்கையை அளித்துள்ளது என்றார்.
இடம்பிடித்தார்
கே.எல்.ராகுல் இந்தியா ஏ அணியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றார்.
ஐபிஎல் சாதனை
இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் 50 ரன்களும் 2வது போட்டியில் 47 ரன்களையும் விளாசினார். 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் I பஞ்சாப் அணிக்காக 53.90 சராசரியுடன் 593 ரன்களை குவித்து இவ்வருட ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தார்.