நேயர்கள் கேள்வி
இந் நிலையில் பிபிசி வானொலி நிகழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்றார். அப்போது அவரிடம் நேயர்கள் தரப்பில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஸ்டோக்சிடம் ஓவர் த்ரோ மூலம் கிடைத்த பவுண்டரியை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
மனசாட்சி
அதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் பென் ஸ்டோக்ஸ். தொடர்ந்து பேசியதாவது: நான் நடுவரிடம் சென்று ஓவர் த்ரோ பவுண்டரியை ரத்து செய்ய கோரினேனா? மன சாட்சிக்கு துரோகம் இல்லாமல் சொல்கிறேன்.
நடுவரிடம் பேசவில்லை
அப்போது நடந்த அனைத்தையும் நான் பார்த்து கொண்டிருந்தேன். அதே நேரத்தில் என்னை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் எப்படி நடுவரிடம் பேசியிருக்க முடியும்?
மன்னிப்பு கோரினேன்
பந்து பேட்டில் பட்டு பவுண்டரிக்கு போனவுடன் நான் எனது மார்பில் கை வைத்து மன்னிப்பு கோரினேன். நடுவரிடம் சென்று பேசவில்லை. அந்த சமயத்தில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் லாதம், கேப்டன் வில்லியம்சனிடம் மன்னித்து விடுங்கள் என்று தான் கேட்டேன் என்றார்.