தொடரும் தோல்விகள்
அணியின் நடவடிக்கையால் பெரும் வேதனை அடைந்துள்ளதாக அவர் கூறி உள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், எங்களது அணி சிறப்பான அணிதான். ஆனால், வீரர்களின் தேர்வு சரியாக நடக்காததால் எங்கள் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
பவுலர்கள்
மற்ற அணிகளில் பொதுவாக பேட்டிங் குறைபாடு இருக்கும். ஆனால், எங்களது அணியில் சரியான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருந்தால் பல போட்டிகளில் நாங்கள் ஜெயித்திருப்போம்.
வீரர்கள் சோர்வு
அதுபோன்று பீல்டிங் மிக மோசம். நிறைய கேட்ச்கள் மற்றும் ரன்களை எங்களது வீரர்கள் கோட்டை விடுகின்றனர். தொடர் தோல்விகளால் எங்களது அணி வீரர்கள் மிகுந்த சோர்வுடன் உள்ளனர்.
மிகுந்த மனக்கஷ்டம்
ஓய்வறையிலும் சுமூகமான சூழல் இல்லை. அதனால் நான் மிகுந்த மன கஷ்டத்துடன் இருக்கிறேன். மேலும் நான் எனது அறையை விட்டு வெளியே வருவதில்லை என்று ரசல் கூறினார்.
மும்பையுடன் சந்திப்பு
கொல்கத்தா அணி வீரர்களின் நிலை குறித்து இப்படி ரசல் ஓப்பனாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று கொல்கத்தா அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ளது. இதில் மும்பை அணி 18 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.