தாஹிர் ஆட்ட நாயகன்
போட்டியில் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார். போட்டிக்கு பின் வெற்றி குறித்து அவர் கூறியதாவது: நாங்கள் எதிர்பார்த்தபடியே வென்றுவிட்டோம்.
மிக்க மகிழ்ச்சி
ஒவ்வொரு வெற்றியின் போது, எனது பங்கும் அதில் இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதும் தோனியுடன் விளையாடும்போது கடுமையாக உழைக்கிறேன்.
தோனி சொல்லும் விஷயம்
தோனி என்னிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து கூறுவார். விக்கெட் டூ விக்கெட் பந்து வீச வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருவார். களத்தில் எப்படியும் பேட்ஸ்மென் தப்பு செய்வார்.
எனக்கு பெருமை
தல தோனியின் ஆலோசனையை பின்பற்றுவேன். விக்கெட் கிடைக்கும்... சென்னை அணியில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.