இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 2க்கு ஒன்று என்ற கணக்கில் கோப்பையை வெற்றி கொண்டுள்ளது. அதிலும் வெற்றியை தீர்மானத்த 4வது மற்றும் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது.
ஆட்டத்தில் முதிர்ச்சி
இதில் இந்திய வீரர்கள், ரிஷப் பந்த் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி அணியை சிறப்பாக வழிநடத்தினர். அந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரிஷப் பந்த். சமீப காலங்களில் அவரது ஆட்டத்தில் மட்டுமின்றி பேச்சிலும் முதிர்ச்சி காணப்படுகிறது.
டிரா 2வது ஆப்ஷன்
இந்நிலையில் தன்னை பொருத்தவரை இந்தியாவிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறவே தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் போட்டியை டிரா செய்வது தனக்கு இரண்டாவது ஆப்ஷனாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளம்வீரர்களுக்கு கிட்பேக்
ஸ்போர்ட்ஸ் டுடேவிற்காக பேசிய அவர், பிசிசிஐயில் ஒப்பந்தம் செய்து தான் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்து ஒவ்வொரு தொடர் முடிந்தவுடன் தன்னுடைய கிட்பேகை இளம் வீரர்களுக்கு தான் கொடுத்து வருவதாகவும் இதேபோன்று தான் சிறுவயதாக இருந்தபோது அதிகமானோர் தனக்கு கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.