4 போட்டிகள் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது. முதல் இரு போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோதேரா மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
கொரோனா பரிசோதனைகள்
சென்னையில் நடைபெறவுள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளையொட்டி 6 நாட்கள் குவாரன்டைன் மற்றும் கொரோனா பரிசோதனைகளை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி முடித்துள்ளது. தற்போது நெட் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த தொடரை வெல்லும் தீவிரத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தொடர் நாயகன் ஜோ ரூட்
கடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி கொண்டுள்ளது. இந்த தொடரில் குறிப்பாக இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டி சென்றுள்ளார் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் ஜோ ரூட்.
கற்று தேர்கிறேன்
இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரிடம் இருந்து கிரிக்கெட்டின் நெளிவு சுளிவுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்று தேர்ந்து அதை தன்னுடைய ஆட்டத்தில் பிரயோகித்து வருவதாக ஜோ ரூட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.