கொல்கத்தா வெற்றி
பிறகு 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் க்றிஸ் லின் 43 ரன்களும், ரஸ்ஸல் 48 ரன்களும் அடித்தனர்.
ரசலின் அதிரடி
இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா வெற்றி பெற முக்கிய காரணம் ரசலின் அதிரடியான பேட்டிங். மொத்தம் 13 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 48 ரன்களை அடித்தார்.
முடிவுடன் ஆடினேன்
பின்னர் இந்த போட்டி குறித்து ரசல் கூறியதாவது:இந்த போட்டியில் நான் களமிறங்கிய போதே ஒரு முடிவெடுத்தேன். என்னால் எவ்வளவு சிக்சர்களை அடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் என்னால் 7 சிக்சர்களை அடிக்க முடிந்தது.
பார்க்க மாட்டேன்
நான் மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கும்போது ஸ்கோர் போர்டை எப்போதும் பார்ப்பதில்லை. ரன்களை விரைவாக குவிக்கிறேனா ? என்பதை மட்டும் பார்க்கிறேன். கொல்கத்தா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.