தள்ளி வைக்கப்பட்ட தொடர்
வழக்கம்போல கடந்த மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஐபிஎல் 2020 தொடர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவில் அதிகமாக இருந்த நிலையில் அதை நடத்த முடியாமல் பரிதவித்தது பிசிசிஐ. முக்கியமாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தொடரை நடத்த அதிக பிரயத்தனப்பட்டார். ஆயினும் செப்டம்பர் மாதத்திற்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
டைட்டில் ஸ்பான்சர் மாற்றம்
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்புகள் இருந்தநிலையில், அதை யூஏஇயில் நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் எல்லை பிரச்சினை காரணமாக டைட்டில் ஸ்பான்சர் விலகிய நிலையில், அதையும் டீரிம் லெவன் உள்ளிட்ட 3 ஸ்பான்சர்களிடம் கை மாற்றினார் கங்குலி.
மும்பை இந்தியன்ஸ் வெற்றி
இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு தற்போது ஏறக்குறைய 60 போட்டிகளுடன் ஐபிஎல் 2020 நிறைவுற்றுள்ளது. இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று தன்னுடைய 5வது கோப்பையை கைப்பற்றியுள்ளது.
வீரர்களுக்கு கங்குலி நன்றி
இந்நிலையில் பயோ பபள் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு இந்த தொடரை சாத்தியப்படுத்தியுள்ள ஐபிஎல் அணி வீரர்களுக்கு சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பொருளாளர் அருண் சிங் துமால் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.