சற்று நேரத்தில் துவக்கம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ஐபிஎல் 2021 தொடர் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது ஆர்சிபி. இதுவரை ஐபிஎல்லின் துவக்க போட்டியில் மோதாத இரு அணிகள் மோதவுள்ளதால் இன்றைய போட்டிக்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
அணியின் முக்கிய வீரர்
இந்நிலையில் இன்றைய போட்டிக்கென சிறப்பான வகையில் தயாராகியுள்ளது ஆர்சிபி. அணியின் முக்கிய வீரராக இந்த சீசனில் க்ளென் மாக்ஸ்வெல் பார்க்கப்படுகிறார். கடந்த சீசனில் சொதப்பிய நிலையிலும் அவரது ஆல் ரவுண்டர் பர்பார்மென்ஸ் அணிக்கு தேவை என்று அவர் மீது நம்பிக்கை வைத்து 14.25 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது ஆர்சிபி.
விராட் சான்றிதழ்
இந்நிலையில் அவர் மிகச்சிறந்த வீரர் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி சான்றிதழ் அளித்துள்ளார். ஆர்சிபி வலைதளத்தில் பேசியுள்ள அவர், மாக்ஸ்வெல்லிடம் சிறப்பான நட்பு உள்ளதாகவும் ஆர்சிபியில் இணைந்துள்ளது குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
|
சிறப்பான பங்களிப்பு
மேலும் கடந்த சீசனை போல அல்லாமல் இந்த சீசனில் அவர் அதிகமான எனர்ஜியுடன் உள்ளதாகவும் இதை சமீபத்திய பயிற்சி ஆட்டங்களில் தான் கண்டதாகவும் விராட் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் ஆர்சிபியில் மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.