அணி அறிவிப்பு
எதிர்பார்த்தபடியே 15 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு வெளியிட்டது. அந்த பட்டியல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. மூத்த வீரர் கிறிஸ் கெயில் அணியில் இடம்பெற்றிருந்தார். அதேபோல, ஆண்ட்ரே ரசல் மற்றும் எர்வின் லெவிஸ் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இடம் இல்லை
ஆனால், அனைவரும் எதிர்பார்த்த பொல்லார்ட், சுனில் நரேன் ஆகிய இருவருக்கும் இடம் இல்லை. 2016ம் ஆண்டிலிருந்து அவர் அணியில் ஆடாததால் அவருக்கு இடம் கொடுக்கவில்லை என்று தேர்வு குழுவினர் விளக்கம் கூறியுள்ளனர்.
ஏமாற்றமே கிடைத்தது
அனைத்து நாடுகளின் டி 20 ஓவர் தொடர்களிலும் ஆடி அசத்துவதால் இடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கிடைக்காமல் போனது
இதுகுறித்து சுனில் நரைன் கூறியதாவது: மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடுவது எப்போதும் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. அந்த வாய்ப்பை தற்போது எனக்கு கிடைக்கவில்லை.
சரி இல்லை
ஆனால், ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் வீச தயாராக இல்லை. டி 20 போட்டிகளில் ஆடுவது சரியாக இருக்கும். 4 ஓவர்களுக்கு என்னால் தாக்குப்பிடிக்க முடியும். எனக்கு அணியில் ஆட விருப்பம் இருந்தாலும், முழுமையாக தயார் ஆகாமல் அணியில் ஆடுவது சரியானது இல்லை என்பதால் ஆடவில்லை என்றார்.