ஷேரேயஸ் ஐயர்
ஷேரேயஸ் ஐயர் அளித்துள்ள பேட்டியில், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய ஏ அணி சார்பாக விளையாடிக் கொண்டு இருக்கிறேன். இங்கே பிட்ச் பேட்டிங் செய்ய மிகவும் சவாலாக இருக்கிறது. அனைத்து பிட்ச்களும் இங்கே பவுலிங் செய்ய சாதகமான பிட்ச் ஆகும்.
இந்திய அணியில்
இந்திய அணியில் விளையாட எனக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் தொடர்ந்து நன்றாக ஆடி வருகிறேன். இந்திய அணிக்கான மேற்கு இந்திய தீவுகள் தொடரில் நான் விளையாடுவேன் என்று நினைக்கிறேன். தேர்வுக்குழு என்னை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்று நம்புகிறேன், என்று ஷேரேயஸ் ஐயர் குறிப்பிட்டு இருக்கிறார்.
என்ன கேப்டன்
ஷேரேயஸ் ஐயர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் இருக்கிறார். இவர் தொடக்க வீரராக மட்டுமில்லாமல் மிடில் ஆர்டரிலும் இறங்கி நன்றாக ஆட கூடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
எப்படி முடியும்
தற்போது தோனிக்கு மாற்றாக களமிறங்கும் ரிஷாப் பண்ட் இந்திய அணியில் 6வது வீரராக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 4வது இடத்தில் தோனியின் ஓய்விற்கு பின் யார் களமிறங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை பிடிக்கும் நோக்கத்தோடுதான் ஷேரேயஸ் ஐயர் அப்படி பேட்டி அளித்துள்ளார் என்று கூறுகிறார்கள்.