சிகிச்சை முறைகள்
இந் நிலையில், காயம்பட்ட இருவரும் உலக கோப்பை தொடரில் தங்களுக்கு ஏற்பட்ட காயம், அதற்கான சிகிச்சை முறை குறித்த அறிக்கையை தேசிய கிரிக்கெட் அகாடமியில் சமர்ப்பித்து ள்ளனர். இருவருடைய அறிக்கை மீது திருப்தி ஏற்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வில் பரிசீலிக்கப் படுவார்கள்.
பங்கேற்பதில் சந்தேகம்?
டிஎன்பிஎல் தொடரில் தமிழக வீரர் விஜய் சங்கர் காலில் பெரு விரல் காயம் காரணமாக பங்கேற்பதில் சந்தேகம் உள்ளது. முழு உடல் தகுதி பெற்றாலும் வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் உடனான போட்டியில் தேர்வு செய்யப் பட்டால் டிஎன்பிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாது.
வலைப்பயிற்சி
இந்நிலையில், காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஆல் ரவுண்டர் விஜய்சங்கர் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் இறுதிகட்ட ஆட்டங்களில் ஆட முடியும் என்று நம்புகிறேன்.
பெரிய வாய்ப்பு
உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்தது மிகப்பெரிய வாய்ப்பு. அதை முடிந்தவரை நன்றாக பயன்படுத்தினேன். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் திடீரென முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதும் எதிர்பாராத ஒன்று. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.
பகிர்ந்து கொள்வேன்
சீனியர் வீரர்களுடன் பழக கிடைத்த வாய்ப்பால் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அந்த அனுபவங்களை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன். டிஎன்பில்லில் சாதிப்பேன். அனுபவங்கள் நிச்சயம் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.