இந்தியா
இங்கிலாந்து இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின் அகமதாபாத் பிட்ச் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததாக இங்கிலாந்து அணி கூறியள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அணி ஐசிசியிடம் புகார் அளிக்கவும் உள்ளது.
பிசிசிஐ
இந்த நிலையில் பிசிசிஐ வேண்டும் என்றே இப்படி பிட்ச்களை உருவாக்குகிறது. இதற்கு ஐசிசி உடந்தையாக உள்ளது. ஐசிசி இந்தியாவை தட்டிக்கேட்பதில்லை என்று இங்கிலாந்து அணியினர், முன்னாள் வீரர்கள் புகார் அளிக்க தொடங்கி உள்ளனர்.
முன்னாள் வீரர்
இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கல் வாகன் அளித்த பேட்டியில், இந்திய அணி ஸ்பின் பிட்சில் நன்றாக ஆட கூடிய அணிதான். ஆனால் இந்தியா போன்ற வலிமையான அணி இப்படி மோசமாக பிட்சை உருவாக்கிவிட்டு அதில் இருந்து தப்ப நினைக்க கூடாது.
ஐசிசி
ஐசிசி பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல செயல்படுகிறது. இதை எல்லாம் அனுமதிக்க கூடாது. இந்தியா தங்களுக்கு விருப்பப்பட்ட பிட்சை உருவாக்குகிறது. இதை எல்லாம் ஐசிசி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்
இந்தியாவின் செயலால் டெஸ்ட் கிரிக்கெட்தான் பாதிக்கப்படுகிறது. ஐசிசி இதை தட்டிக்கேட்கவில்லை என்றால் இந்தியா இதேபோன்ற பிட்சை உருவாக்கும். இதேபோன்ற தவறுகளை செய்துவிட்டு இந்தியா தப்பிக்க முயற்சி செய்யும். இதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று, மைக்கல் வாகன் குறிப்பிட்டுள்ளார்.