லண்டன் : இங்கிலாந்தில் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் கிரிக்கெட் விளையாட்டில் நேர்மையை குலைக்கும் வகையில் நடந்துவரும் சம்பவங்களை பற்றி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் பேசும்போது, ஷேன் வார்னே, கோஹ்லி, பென் ஸ்டோக்ஸ் போன்ற குறிப்பிட்ட மனப்பாங்கை காட்டும் வீரர்கள் மட்டுமல்ல டிராவிட், தோனி போன்ற வீரர்களும் தேவை. அப்பொழுதுதான் நாம் அனைவரும் சரியான இடத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என கூறினார்.