என்ன போட்டி
நேற்று இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. அதன்பின் வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இதனால் அந்த அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
என்ன செய்தார்
இந்த போட்டியில் ஷபீர் ரகுமான் 40வது ஓவர் வீசிக்கொண்டு இருக்கும் போது அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. பவுலிங் போட வந்த ரகுமானை நிறுத்திவிட்டு பேட்டிங் செய்த தோனி வங்கதேச பீல்டரை இடம்மாறி நிற்க சொன்னார். அவர் நிற்பது சரியல்ல என்று கூறி அவரை மாறி நிற்க சொன்னார். இதனால் ரகுமான் தனது பீல்டரை உடனே மாறும்படி கூறினார்.
மாற்றம் இல்லை
பொதுவாக எதிரணி வீரர்கள் இப்படி பீல்டிங்கை மாற்ற மாட்டார்கள். ஆனால் தோனி நேற்று இப்படி செய்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏன் அவர் இப்படி செய்தார், வங்கதேச வீரர்கள் எப்படி அதற்கு பொம்மை போல தலையாட்டினார்கள் என்று நிறைய கேள்வி எழுந்துள்ளது.
|
ஏன் இப்படி
இதற்கான பதில் தற்போது கிடைத்து இருக்கிறது. அதன்படி தோனி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது வங்கதேச பீல்டர் நடந்து கொண்டு இருந்துள்ளார். இது தோனிக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது. பவுலிங் போட்ட பின்பே பீல்டர்கள் நகர வேண்டும். இதனால் அவரை குற்றஞ்சாட்டும் விதமாக தோனி ஒரு இடத்தில் நிற்கும்படி சைகை காட்டினார்.
கேட்டுக்கொண்டார்
பொதுவாக வங்கதேச வீரர்கள் களத்தில் எதிரணி வீரர்களை அதிகம் சீண்டுவது வழக்கம். ஆனால் அவர்கள் தோனியை சீண்டும் போதெல்லாம் அவர் அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். நேற்று பீல்டிங்கில் இப்படி ஏமாற்றம் செய்ய முயலும் போது உடனே அவர் அதை கண்டித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.