ஆனால் என்ன
ஆனால் ஒரே மாதிரி உடை கொண்ட இரண்டு அணிகள் மோதும் நேரத்தில் ஒரு அணி உடையை மாற்ற வேண்டி இருக்கும். உதாரணமாக இந்தியா ஆப்கானிஸ்தான் இரண்டும் நீல நிற உடை கொண்டது. இதனால் இந்தியாவுடன் மோதும் போது, ஆப்கானிஸ்தான் அணி உடையை மாற்ற வேண்டும். உலகக் கோப்பையில் விளையாடும் 5 அணிகள் தங்கள் ஜெர்ஸியை சில போட்டிகளுக்கு மட்டும் மாற்ற வேண்டும்.
எந்த அணிகள்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நீல நிற உடை கொண்டது. வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, ஆகியவை பச்சை நிற உடை கொண்டது. இதனால் இந்த அணிகள் மோதும் போது ஒரே நிற ஜெர்ஸிக்கு பதிலாக மாற்று ஜெர்சியை அணிய வேண்டும். ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து ஆகியவை தனித்துவமான வண்ணங்களை கொண்டு இருப்பதால் ஜெர்ஸி மாற்ற தேவையில்லை.
என்ன தேர்வு
இதில் இலங்கை மஞ்சள், ஆப்கானிஸ்தான் சிவப்பு, வங்கதேசம் சிவப்பு, தென்னாப்பிரிக்கா மஞ்சள் ஆகிய நிறங்களை தேர்வு செய்து இருக்கிறது. ஆனால் இந்தியா வித்தியாசமாக காவி நிறத்தை தேர்வு செய்துள்ளது. வரும் 30ம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த காவி நிற உடையில்தான் விளையாட போகிறது.
பாஜக சர்ச்சை
இந்த காவி உடையின் தேர்வுக்கு பின் பாஜக இருப்பதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது. ஆளும் பாஜக அரசின் அழுத்தத்தின் காரணமாகத்தான் இந்திய அணியின் உடைக்கு காவி நிறம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் புகாரும் வைத்து இருக்கிறது.
உண்மை என்ன
ஆனால் இது முழுக்க முழுக்க பிசிசிஐ மேலிட உத்தரவு என்றும் கூறுகிறார்கள். பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் உடையில் ஏற்கனவே காவி நிறம் இருக்கிறது. அதைத்தான் பெரிதாக்கி, நீல நிறத்தை சிறிதாக்கி அவே ஜெர்சியாக பயன்படுத்துகிறோம். இது பிசிசிஐ போட்ட ஆர்டர்தான் என்றும் சிலர் கூறுகிறார்கள்.