அபராதம் விதிப்பு
போட்டிகள் முடிய கூடுதல் நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்காக தான் அபராத முறை, தகுதியிழப்புப் புள்ளிகள் ஆகிய முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது மாறாக கேப்டனை ஒரு போட்டியில் அல்லது 4 போட்டிகளில் உட்கார வைப்பது என்ற விதிமுறை போய் அணி மொத்தத்திற்கும் அபராதம் விதிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்டாப் கிளாக் முறை
இந்நிலையில் அபராத முறை குறித்து ஐசிசி தெரிவித்துள்ளதாவது: டி 20, குறைந்த ஓவர் போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறை கொண்டு வரப்படுகிறது. அதாவது, டி20 போட்டி தொடங்கும் முன்பாக 85 நிமிடங்கள் என்று கடிகாரம் காட்டும் முதல் ஓவரிலிருந்து அது தொடங்கி பிறகு அது குறைந்து கொண்டே வந்து பின்னர் ஜீரோவில் நிற்கும்.
ஜீரோ வரும்
நோக்கம் என்னவெனில் வீரர்கள், பார்வையாளர்கள் நடுவர்கள் ஆகியோ ருக்கும் தெரிய வேண்டும். கடிகாரம் ஜீரோ என்று காட்டும் போது பவுலிங் அணி தன் கடைசி ஓவரை வீச தொடங்கியிருக்க வேண்டும்.
இடையூறு கணக்கீடு
ஆனால் அதே வேளையில் டிஆர்எஸ் முறையீடு, வீரர்கள் காயம் ஆகிய வற்றினால் ஆட்டத்தில் இடையூறு ஏற்படும். அப்போது தேவைப்பட்டால் வீணாகும் கால அளவை நடுவர் கடிகார பட்டானை அழுத்தி மீண்டும் கூட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.