அடுத்த தோனி?
இந்த நிலையில், தோனிக்கு பிறகு எந்த ஒரு அதிரடி வீரரையும் இந்திய அணி இதுவரை கண்டு பிடிக்கவில்லை. ரிஷப் பண்ட் திறமையான வீரராக அறியப்பட்டாலும், சர்வதேச ஒருநாள், டி20 போட்டியில் அதனை அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் கில்கிறிஸ்ட்க்கு இணையாக தான் ரசிகர்களால் போற்றப்படுகிறார்.
தினேஷ் பானா
ஆனால் இம்முறை தோனியை போலவே அதிரடியாக ஆடக் கூடிய விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு கிடைத்துவிட்டார். ஆம், ஹரியானாவை சேர்ந்த 17 வயதான தினேஷ் பானா , அண்டர் 19 கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார். ஆனால் தோனியை போல் தனித்துவமான ஷாட்களை ஆடவில்லை என்றாலும், இவர் பிக் ஹிட்டருக்கு ஏற்ற இலக்கணத்தில் கலக்குகிறார்.
அதிரடி ஆட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த போது களத்துக்கு வந்தார் தினேஷ் பானா. எதிர்கொண்ட நான்கே பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார் தினேஷ் பானா. இதன் மூலம் 260, 270 ஐ தான் இந்திய அணி தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 290 ஐ ஸ்கோர் தொட்டது.
எகிறிய எதிர்பார்ப்பு
இதனால், தினேஷ் பானா மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இறுதி ஆட்டத்திலும் தினேஷ் பானா கலக்குவார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் இவரது ஆட்டத்தை காண வெயிட்டிங். ஏற்கனவே தினேஷ் பானாவை பல ஐ.பி.எல். அணிகள் குறிவைத்துள்ளன. பானா காத்தாடியை போல் பந்தை பறக்கவிடும் தினேஷ் பானாவின் ஸ்பேஷல் ஆட்டத்தை இன்று ரசிகர்கள் பைனலில் பார்க்கலாம்.