இரவில் மழை
இறுதிப் போட்டி நடைபெற்ற விவயன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டது. 2 நாட்களுக்கு அங்கு நடந்த போட்டியில் ஒரே இன்னிங்சில் 350 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது.இதனால் டாஸ் வென்ற இங்கிலாந்த அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியும் பேட்டிங் செய்வதாக தான் இருந்தது. ஆனால் நேற்று இரவிலிருந்து காலை வரை ஆண்டிகுவாவில் கன மழை பெய்துள்ளது.
காப்பற்றப்பட்ட இந்தியா
இதனால் ஆடுகளத்தின் ஈரப்பதம் கொஞ்சம் இருந்ததால் முதலில் பந்துவீசிய இந்திய அணி, அதனை நன்கு பயன்படுத்தி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதனால் அப்போதே இந்தியாவின் வெற்றி தொடக்கமானது. ஒரு வேலை, இந்தியா முதலில் பேட் செய்து இருந்தால், இதே நிலை தான் ஏற்பட்டு இருக்கும். இதனால் இயற்கை தான் காப்பாற்றியது.
அபார கேட்ச்
இங்கிலாந்து அணி சரிவை கண்டாலும், 8 வது விக்கெட்டுக்கு அந்த அணி 93 ரன்களை சேர்த்தது. பொறுப்பாக விளையாடிய ஜேம்ஸ் ரூவ் பெரிய இலக்கை குவிப்பதற்காக அதிரடியாக ஆடினார். ஆனால் 95 ரன்கள் எடுத்த போது, அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கௌசல் தாம்பே தவறவிட்டு, பின்னர் 2வது முயற்சியில் பாய்ந்து அபாரமாக பிடித்தார்.இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து தவறு
ஒரு வேலை, அவர் கேட்ச் விட்டு இருந்தால் இங்கிலாந்து 220 ரன்களை தொட்டு இருக்கும், அதனை துரத்த இந்தியாவும் சிரமப்பட்டு இருக்கும். இதே போன்று இங்கிலாந்து அணி இந்தியாவின் விக்கெட்டுகளை முக்கிய கட்டத்தில் எடுத்தாலும், சுழற்பந்துவீச்சாளர்கள் விசும் போது சிலிப்பில் ஃபில்டரை நிறுத்த தவறியது. இதனால் 2 ராஜ் பவா, நிஷாந்த் சிலிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பு பவுண்டரிகளாக சென்றது.
Recommended Video
கவாஸ்கர் சூனியம்
போட்டியின் போது வர்ணனையாளராக இருந்த ரோகன் கவாஸ்கர், இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் டக் அவுட்டே ஆகவில்லை என்று கூற, அடுத்த பந்திலேயே இங்கிலாந்து கேப்டன் டாம் பிரீஸ்ட் டக் அவுட்டானார். இதனால் மற்ற கமெண்டேடர்கள், ரோகன் கவாஸ்கரை வார்த்தையால் சூனியம் வைத்துவிட்டதாக கேலி செய்தனர்.