மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி கடைசியில் ஒன்சைட் போட்டியாக மாறிப் போனதுதான் பெரும் சோகம்.
இந்தியா இப்போட்டியில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பேட்டிங் சரியில்லை. பவுலிங் சரியில்லை, பீல்டிங்கும் மோசம். எந்த துறையிலும் இன்று இந்தியாவின் கை ஓங்கியிருக்கவில்லை. இதுதான் மிகப் பெரிய காரணம்.
இந்தியா முதல் பந்திலிருந்தே சுதாரிக்கத் தவறி விட்டது. அப்படிச் சொல்வதை விட இந்தியாவை எந்த நிலையிலும் சுதாரித்து எழ விடாத வகையில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கும், பந்து வீச்சும் கூடவே பீல்டிங்கும் அபாரமாக இருந்தது. இதனால்தான் இந்தியாவால் எந்த இடத்திலும் எழ முடியாமல் போய் விட்டது என்று சொல்ல வேண்டும்.
மொத்தமா போச்சு.. டாப் ஆர்டர் இப்படியா விளையாடுவது.. ஏமாற்றத்தில் தள்ளிய இந்தியா
இன்றைய இறுதிப் போட்டியின் சில சிறப்பம்சங்கள்...