எப்படி நடந்தது
இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்து இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தொடக்கத்தில் இருந்தே திணறியது. அப்படி இப்படி அடித்து ஆடி கடைசியாக 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
என்ன நடந்தது
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 30வது ஓவரை வீசினார். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் ஹசமத்துல்லா ஷாகிதி பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். ஹசமத்துல்லா அப்போது 24 ரன்கள் எடுத்து இருந்தார். யார்க்கர் போட முயற்சி செய்த வுட், தவறி லோ புல் டாஸ் பந்து போட்டார்.
செம அடி
இந்த பந்து 145 கிமீ வேகத்தில் வந்தது. நேரடியாக சென்ற பந்து ஹசமத்துல்லா தலையில் நங்கென்று விழுந்தது. பந்து பட்டதும் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனே மருத்துவர்கள் வந்து அவரை சோதனை செய்தனர். அவர் அதற்கு மேல் விளையாட முடியாது என்று கூறினார்கள். உடனே ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார்கள்.
ஆனால் என்ன
ஆனால் ஹசமத்துல்லா அதை கேட்காமல் தொடர்ந்து விளையாடினார். மார்க் வுட் இந்த சம்பவத்தை பார்த்து பதறிப்போனார். அதன்பின் காயத்துடன் ஆடிய ஹசமத்துல்லா 100 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். தற்போது இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று கிரிக்கெட் போட்டியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.