ரசல் எப்படி
மேற்கு இந்திய தீவுகள் அணி சில அதிரடியான வீரர்களை நம்பித்தான் இந்த உலகக் கோப்பை தொடரில் களமிறங்கியது. அதில் ஒருவர் ஆண்ட்ரு ரசல். ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்த இவர் உலகக் கோப்பையில் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் உலகக் கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை .
காயம் அடைந்தார்
இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் அவர் காயம் அடைந்தார். ரசல் காலில் ஏற்பட்ட காயம் பெரிதானது. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து சோதனை செய்து பார்த்தனர். அவரின் காலில் காயம் மோசமாக இருந்ததால், அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
|
ஆபரேஷன்
இதனால் நேற்று இவருக்கு ஆபரேஷன் நடந்தது. காலில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய அவருக்கு ஆபரேஷன் நடந்தது. இவர் தான் மருத்துவமனையில் படுத்து கிடக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார். எனக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் போட்டுள்ளார்.
மக்கள் வருத்தம்
இதை பார்த்துவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். ரசல் சரியாகி வர வேண்டும். மீண்டும் அதிரடியாக ஆட வேண்டும் என்று கமெண்ட் செய்துள்ளனர். ஐபிஎல் ரசிகர்கள் பலர் இப்படி கமெண்ட் செய்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.