கோலியை நம்பும் பாபர் ஆசம்
பாபர் ஆசம், பாகிஸ்தான் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 63 ரன்கள் விளாசி, ஒரு வகையில், பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாபர் ஆசம் பேட்டிங்கை ரொம்பவே நம்பிக் கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி நிர்வாகம். ஆனால், அவரோ, விராட் கோலியைத்தான் நம்பிக் கொண்டுள்ளாராம்.
வெறியேற்றும் பாபர்
விராட் கோலி பேட்டிங் ஸ்டைலை, வீடியோவில் பார்த்து, பார்த்து வெறியேத்திக் கொண்டுள்ளாராம், பாபர் ஆசம். பல்வேறு சூழ்நிலைகளிலும், கோலி எப்படி பேட்டிங் திறமையை அட்ஜஸ்ட் செய்து கொண்டு ஆடுகிறார் என்பதை பார்த்து, நானும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன் என்கிறார் இந்த 24 வயது இளம் பாகிஸ்தான் வீரர்.
சாம்பியன்ஸ் டிராபில வின் பண்ணிட்டாங்களாம்
பாபர் ஆசம் மேலும் சொன்னதை பாருங்கள்: இந்தியாவை ஐசிசி தொடர்களில் வீழ்த்தவே முடியாது என்ற நிலைமையை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மாற்றினோம். இறுதிப் போட்டியில், இந்தியாவை வெற்றி கண்டோம். அதை உந்துதலாக கொண்டு, நாளைய போட்டியை எதிர்கொள்வோம். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றி எங்களுக்கு ரொம்பவே நம்பிக்கை கொடுத்துள்ளது.
பயங்கர எதிர்பார்ப்பாம்
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மோதும் போட்டியை உலகமே உற்று பார்க்கும் என்பதால், நாங்கள் தக்க வகையில் தயாராகியுள்ளோம். நான் மட்டுமல்லாது, எல்லா வீரர்களுமே, இந்த போட்டியை எதிர் நோக்கி காத்திருக்கிறோம் என்கிறார், பாபர் ஆசம்.
நம்பர் ஒன் பந்து வீச்சாளர்
இந்தியாவின் பந்து வீச்சு, உலகின் நம்பர் ஒன் பவுலர், ஜஸ்ப்ரிட் பும்ரா உள்ளிட்டோரால் பலம்மிக்கதாக உள்ளதே, எப்படி அதை எதிர்கொள்ள திட்டம் வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, இந்தியா சிறந்த பவுலிங் அணி என்பது உண்மைதான். ஆனால், நல்ல வேகப்பந்து தாக்குதலை தொடுத்த இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் நன்கு விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். அதனால், இந்திய வேகப்பந்து வீச்சு, தாக்குதலையும் சமாளிப்போம் என்று நம்புகிறோம் என்றார், பாபர் ஆசம்.