வெற்றி
நேற்று 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்தது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர். அதன்பின் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது. இதனால் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
யார் விக்கெட்
இந்திய அணி பவுலிங் போட்ட போது, ஒவ்வொரு மேற்கு இந்திய தீவுகள் வீரரையும் திட்டமிட்டு விக்கெட் எடுத்தனர். அதிலும் மேற்கு இந்திய தீவுகளின் கேப்டன் ஹோல்டர் விக்கெட்டை எடுக்க தோனி போட்ட திட்டம் பெரிய வைரலாகி உள்ளது. அவர் கொடுத்த முக்கியமான ஐடியாதான் வலுவான ஹோல்டரை எளிதாக வீழ்த்த உதவியது.
— Freak (@wristy_18) June 27, 2019 |
கோலி என்ன செய்தார்
ஹோல்டர் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது 23வது ஓவரை சாஹல் வீசினார். அப்போது பீல்டிங் மாற்றிய கோலி கவர் திசையில் வீரர் ஒருவரை நிற்க வைத்தார். உடனே தோனி கோலியிடம் சென்று பேசினார். 2 நிமிடங்கள் வரை இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இன்னொரு வீரர் அங்கே இருக்க வேண்டும் என்று தோனி கேட்டார்.
சாஹல் வந்தார்
இதனால் எக்ஸ்டரா கவரில் கேதார் வந்து நின்றார். சரியாக அந்த பந்தை ஆப் சைடில் பெரிய ஸ்விங் இல்லாமல் போட்டார் சாஹல். திட்டமிட்டபடி அதை பவுண்டரி அடிக்க முயன்று வலையில் சிக்கினார் ஹோல்டர். சரியாக அந்த பந்து எக்ஸ்டரா கவரில் இருந்து கேதாரின் கையில் போய் விழுந்தது. சரியான நேரத்தில் தோனியும், கோலியும் பேசி போட்ட இந்த திட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது குறிப்பிடத்தக்கது.