என்ன சர்ச்சை
இதனால் தோனிக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. தோனி இப்படி ஆடி இருக்க கூடாது. அவர் ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக திணறுகிறார். அவர் முக்கிய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அவர் உடனே ஓய்வு பெற வேண்டும் என்று பல ரசிகர்கள் குறிப்பிட்டு இருந்தனர். தொடர்ச்சியாக தோனிக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
எப்படி ஆனது
இதனால் தோனி கடுமையான மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தோனிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டி. இதில் எப்படியாவது சரியாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தோனி இருக்கிறார். இதனால் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
என்ன பயிற்சி
இந்த நிலையில்தான் தோனியின் பயிற்சி குறித்து இந்த அணியின் தேர்வு குழு தலைவரும், பேட்டிங் ஆலோசகருமான எம்எஸ்கே பிரசாத் பேட்டி அளித்துள்ளார். அதில் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். தோனி எப்போதையும் விட கூடுதல் நேரம் பயிற்சி எடுத்து வருகிறார். நேற்று அவர் நீண்ட நேரம் பயிற்சி செய்தார்.
ஒரு ஷாட்
தோனி ஸ்வீப் ஷாட்களை மீண்டும் மீண்டும் அடித்து பழகினார். தொடர்ந்து பலமுறை இந்த ஷாட்களை அவர் அடித்து பார்த்தார். இது ஸ்பின்னர்களுக்கு எதிராக பெரிய அளவில் உதவும் என்று அவர் இப்படி பயிற்சி எடுத்தார். இந்திய அணியில் மற்ற வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள், என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.