தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் 2004ல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதே வருடம் உலகக் கோப்பை அணிக்கும் தேர்வானார். ஆனால் அப்போது அவர் அணியில் விளையாட முடியவில்லை. கீப்பராக அறிமுகம் ஆன இவர் தோனியின் வருகைக்கு பின் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.
15 வருட காத்திருப்பு
இவர் 15 வருடமாக உலகக் கோப்பையில் களமிறங்க காத்து இருக்கிறார். அடுத்த உலகக் கோப்பையில் இவர் ஆட மாட்டார். 2007ல் ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற உலகக் கோப்பை அணியில் இவர் இடம்பெற்று இருந்தார். ஆனால் அப்போதும் அவருக்கு அணியில் களமிறங்கி விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
என்ன திறமை
இவர் இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பையில்தான் தன்னுடைய திறமையையும் நிரூபித்தார். ஆனாலும் இவர் உலகக் கோப்பை தொடரில் சென்ற போட்டி வரை களமிறக்கப்படவில்லை. திறமை இருந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில போட்டிகளாக ஜாதவ் சரியாக ஆடவில்லை. இவர் தொடர்ந்து சொதப்பி வந்தார்.
வந்தார்
ஜாதவின் இடத்திற்கு ஆல் ரவுண்டர் அல்லாத நல்ல பேட்டிங் ஸ்பெஷலிஸ்டை கொண்டு வர திட்டமிட்டு இருந்தார் கோலி. இதற்கு இரண்டு பேருக்கு இடையில் போட்டி நிலவுவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடையில்தான் இந்த இடத்திற்கு போட்டி நிலவி வந்தது. ஆனால் ஜடேஜாவிற்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செம
இதனால் தற்போது தினேஷ் கார்த்திக்கின் 15 வருட கனவு நிறைவேறி இருக்கிறது. அவர் 2004ல் இருந்து ஆசைப்பட்ட அந்த விஷயம் இன்றைய போட்டியில் நடக்க உள்ளது. இன்று அவர் பெரும்பாலும் 7வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.