மிக மோசம்
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பி வருகிறது. ரோஹித் சர்மா 18 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார். அதே போல் கே எல் ராகுல் 48 ரன்கள் இருக்கும் நேரத்தில் அவுட்டானார். விஜய் சங்கரும் 14 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின் கேதார் 7 ரன்களுக்கு அவுட்டானார்.
கோலி மட்டும்
கோலி மட்டும் இந்திய அணியில் அதிரடியாக ஆடி வந்தார். இவரும் 72 ரன்கள் இருக்கும் போது தேவையில்லாமல் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த போட்டியிலும் தோனி மிகவும் நிதானமாக ஆடினார். இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் போட்ட ஓவரில் தோனி ஸ்டம்பிட் ஆக சென்றார். தேவையில்லாமல் இறங்கி வந்து ஆட முயன்று அவுட்டாக முயன்றார்.
ஆனால் இல்லை
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் ஸ்டம்பிட் ஆகாமல் தப்பித்தார். மேற்கு இந்திய தீவுகள் கீப்பர் அந்த பந்தை விட்டுவிட்டு, தவறி ஸ்டம்பிட் செய்வதற்கு பதிலாக கிளவுசால் ஸ்டம்பை அடித்தார். இதனால் தோனி தப்பித்தார். கடைசி ஆப்கானிஸ்தான் போட்டியிலும் தோனி இப்படித்தான் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் போட்டியில் இவர் ஸ்டம்பிட் முறையில்தான் அவுட்டானார்.
மீண்டும் அப்படியா
இன்று மீண்டும் அவர் அப்படி அவுட்டாக ஆசைப்பட்டது பெரிய சர்ச்சையானது. களத்தில் இந்த சம்பவம் பெரிய வைரலானது. பல பேர் தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். தோனி ஏன் இப்படி பொறுப்பே இல்லாமல் ஆடுகிறார் என்று பலர் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.