For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட அவரும் வந்துவிட்டார்.. இனி கவலையில்லை.. அடுத்தடுத்த குட் நியூஸ்களால் குஷியில் இந்திய அணி!

மேற்கு இந்திய தீவுகளை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வரும் வியாழக்கிழமை எதிர்கொள்ள இருக்கிறது.

Recommended Video

அடுத்து அடுத்து நல்ல செய்தி... குஷியில் இந்திய அணி!

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு நிறைய ஸ்வீட் செய்திகள் காத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் வெற்றிகரமாக வலம் வரும் இரண்டு அணிகளில் ஒன்று நியூசிலாந்து, இன்னொரு அணி இந்தியா. இரண்டு அணிகளும் எங்களுக்கு தோல்வியே கிடையாது என்று அனைத்து போட்டியிலும் வென்றுவிட்டது.

இதற்கு இடையில்தான் வலுவான மேற்கு இந்திய தீவுகள் அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது. வரும் வியாழக்கிழமை நடக்கும் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலம் இல்லை

பலம் இல்லை

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டும்தான் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றுள்ளது. ஆனாலும் மேற்கு இந்திய தீவுகள் அணியை கணிக்கவே முடியாது. எப்போது எந்த வீரர் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைப்பார் என்று தெரியாது. அதேபோல் வரிசையாக தோல்வியை தழுவி இருக்கும் அந்த அணி எப்போது வெற்றியை ருசிக்கலாம் என்றும் வெறியில் இருக்கிறது.

கடும் எதிர்பார்ப்பு

கடும் எதிர்பார்ப்பு

இதனால் இந்தியா மேற்கு இந்திய தீவுகள் இரண்டு அணிகளும் மோதும் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், இரண்டு அணிகளும் பேட்டிங் ஆர்டர் ஒரே மாதிரி கொண்டது. அதேபோல் இரண்டு அணியிலும் பவுன்சர் மற்றும் யார்க்கர் போட்டு தாக்கும் பவுலர்கள் உள்ளனர். இதனால் இருவரும் மோதிக்கொள்வது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.

ஆனால் இப்போது

ஆனால் இப்போது

இந்த நிலையில்தான் நேற்று இந்திய அணிக்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்தது. அதன்படி மேற்கு இந்திய தீவுகளின் வீரர் ஆண்ட்ரு ரசல் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார். இவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல்தான் இந்திய அணி குழம்பிக் கொண்டு, நிறைய திட்டமிட்டுக் கொண்டு இருந்தது. இவர் இனி இந்த தொடரில் விளையாட மாட்டார் என்பது இந்திய அணிக்கு அசுவாசத்தை அளித்துள்ளது.

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

இந்திய அணியில் 4வது இடத்திற்கு நிலவி வந்த சிக்கல் சரியாகிவிட்டது என்று கூறுகிறார்கள். ஆம் இந்திய அணியில் 4வது வீரராக தற்போது தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். விஜய் சங்கர் இனி அவுட். தினேஷ் கார்த்திக் இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். பயிற்சியில் இவர் ஆட்டம் சிறப்பாக இருந்ததாக கூறுகிறார்கள். கோலி இவரின் ஆட்டத்தால் திருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

செம

செம

அதைப்போல் இரண்டு போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கி ஆடிய கே எல் ராகுலும் பயிற்சியின் போது நிறைய வித்தியாசம் காட்டினார். அதேபோல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக வெளிநாட்டு தொடர்களில் இந்தியா சிறப்பாக ஆடும் என்ற பாசிட்டிவ் வரலாறும் நமக்கு இருக்கிறது. இப்படி தொடர் நல்ல செய்திகளால் இந்திய அணி அடுத்த போட்டியிலும் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, June 25, 2019, 12:59 [IST]
Other articles published on Jun 25, 2019
English summary
ICC World Cup 2019: Good news after and after leaves team India in a positive vibe against WI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X