டாஸ் வென்றது
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் கே எல் ராகுல் இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவர் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். இதில் 2 சிக்ஸர் அடக்கம். அதேபோல் 3 பவுண்டரி அடக்கம்.
ரோஹித் சர்மா
அதேபோல் கே எல் ராகுல் இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். கே எல் ராகுல் பொறுமையாக ஆடினார். அவர் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். இதில் 2 சிக்ஸர் அடக்கம். அதேபோல் 3 பவுண்டரி அடக்கம். இவர் மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். இதில் 14 பவுண்டரி 3 சிக்ஸர் அடக்கம்.
யார் இறங்கினார்
முறைப்படி ரோஹித் சர்மா அவுட்டான பின் கோலியுடன் விளையாட விஜய் சங்கர்தான் களமிறங்க வேண்டும். ஆனால் சென்ற போட்டியில் நடந்தது போலவே இந்த போட்டியிலும் நிறைய டிவிஸ்ட் நடந்தது. சென்ற போட்டியை போலவே இந்த போட்டியிலும் 4வது பேட்ஸ்மேனாக பாண்டியா இறங்கினார். களமிறங்கிய நொடியில் இருந்து பாண்டியா அதிரடியாக ஆடினார்.
என்ன அதிரடி
காட்டன் என்று சொல்வது போல மாட்டிய பந்துகளை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு பறக்கவிட்டார். 19 பந்துகள் பிடித்த அவர் 26 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரி அடக்கம். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்தது. திட்டமிட்டபடி பாண்டியா வந்து இந்தியாவின் ரன் ரேட்டை அதிரடியாக உயர்த்தினார்.
வாவ் ஐடியா
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோனி கொடுத்த ஐடியாவின் பெயரில் பாண்டியா 4வது இடத்தில் களமிறங்கினார் . தற்போது அதேபோல் மீண்டும் தோனி ஐடியாவை போலவே 4வது இடத்தில் பாண்டியா இறங்கி அதிரடி காட்டி இருக்கிறார் என்பது குரோப்பிடத்தக்கது.