என்ன செய்தார்
கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக போட்டியில் இந்திய அணியின் கீப்பர் தோனி இந்த பேட்சை அணிந்து விளையாடினார். தோனி மிலிட்டரி உடை மாடலில் ஒரு கிளவுஸ் அணிந்து வருகிறார். இதில் பாலிடான் பேட்ச் முத்திரை இருந்தது. இது பெரிய சர்ச்சையானது.
ஏன் சர்ச்சை
அவர் அணிந்து இருந்த கிளவுஸ் இணையம் முழுக்க வைரலானது . இதன் வெளிப்பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் ஐசிசி விதிகளின் படி, ஒரு குறிப்பிட்ட ராணுவம், மதம், பிரிவினை, இதை குறிக்கும் வகையில் ஆடை அணிய கூடாது. இதனால் இதற்கு ஐசிசி எதிர்ப்பு தெரிவித்தது.
தடை போட்டது
இதையடுத்து இந்த பேட்சிற்கு ஐசிசி தடையும் விதித்தது. இது தோனி ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் பிசிசிஐ தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. ஆனால் அதை ஐசிசி ஏற்றுக்கொள்ள மறுத்தது. தோனி கண்டிப்பாக அந்த கிளவுஸை அணிய கூடாது என்று ஐசிசி தெரிவித்தது.
அணியவில்லை
இதையடுத்து கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தோனி அந்த கிளவுஸை அணியவில்லை. ஐசிசி விதிகளை பின்பற்றி தோனி அந்த கிளவுஸை அணியாமல் வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் எதிர்பார்ப்பில் வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இப்போது என்ன
இந்த நிலையில் தோனியின் மொபைல் கவர் தற்போது திடீர் என்று வைரலாகி உள்ளது. அந்த கவரில் தோனி பாலிடான் பேட்சை வைத்து இருக்கிறார். அதேபோல் அவரின் டீ ஷர்ட் ஒன்றிலும் பாலிடான் பேட்ச் இருக்கிறது. இந்த இரண்டு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செம தில்
வாவ் தல தோனிக்கு செம தில் தான் என்று எல்லோரும் டிவிட் செய்து வருகிறார்கள். ஐசிசி எதிர்ப்பை தோனி வித்தியாசமாக கிண்டல் செய்துள்ளார். தன்னுடைய ஸ்டைலில் தோனி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.