மாற்றம் தேவை
அந்த இரண்டு நாடுகளும் தங்கள் ஜெர்ஸியை மாற்ற தேவையில்லை. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நீல நிற உடை கொண்டது. வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, ஆகியவை பச்சை நிற உடை கொண்டது. இதனால் இந்த அணிகள் மோதும் போது ஒரே நிற ஜெர்ஸிக்கு பதிலாக மாற்று ஜெர்சியை அணிய வேண்டும்.
என்ன தேவை
இதனால் ஏற்கனவே இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் புதிய ஜெர்சியை அறிவித்துவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணி தனது புதிய ஜெர்சியை அறிவிக்கவில்லை. இந்தியா எப்போது தனது புதிய ஜெர்சியை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
ஏன் முக்கியம்
இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் விளையாடும் போட்டி 22ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி மாற்று ஜெர்சியை அணிய வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி நீல நிற உடையை அணியும். இதனால் இந்தியா உடையை மாற்ற வேண்டும். இதுதான் தற்போது அவசரமான உடை தேர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.
என்ன கலர்
தற்போது காவி நிற உடையை தேர்வு செய்ய பிசிசிஐயில் சிலர் பரிந்துரை செய்து இருக்கிறார்கள். காவி அதிகமாகவும், நீலம் குறைவாகவும் இருக்கும் படி உடையை வடிவமைக்க பிசிசிஐ முடிவெடுத்து உள்ளது. மத்திய பாஜக அரசுக்கும் காவி பிடிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.
ஏன் எதிர்ப்பு
ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்திய அணிக்கு காவி நிறம் கொடுக்க கூடாது. இது அணியில் பாகுபாட்டை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். இதனால் சிவப்பு நிறத்தை இந்திய அணி தேர்வு செய்யலாம் அல்லது மிலிட்டரி ஷேட் கொண்ட கலரை தேர்வு செய்யலாம். ஆஷ் கலரை தேர்வு செய்யலாம் என்று கூறி உள்ளனர்.
பெரிய குழப்பம்
இதனால் இந்திய அணியில் தற்போது பெரிய குழப்பம் நீடித்து வருகிறது. புதிய உடை எப்போது வெளியாகும் என்று கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.