ஆனால் என்ன
ஆனால் இந்திய வீரர்கள் இல்லாமல் மற்ற அணியை சேர்ந்த சில வீரர்களும் ஐபிஎல் போட்டிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலர் இதனால் பலன் அடைந்தனர் என்றும் கூறலாம். உதாரணமாக பார்ம் இல்லாமல் இருந்த கெயில் ஐபிஎல் தொடரில்தான் பார்மிற்கு வந்தார். பார்மில் இருந்த ரஸல் ஐபிஎல் போட்டிக்கு பின்புதான் பார்மை இழந்தார்.
யார் பாதிப்பு
ஆனால் ஐபிஎல் போட்டிகளால் அதிகம் பாதித்தது தென்னாப்பிரிக்கா அணிதான் என்கிறார்கள். ஆம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முக்கிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளால் பார்ம் அவுட் ஆகியுள்ளார். சிலர் காயம் அடைந்து இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் ரபாடா டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடினார். அவருக்கு அப்போது முதுகில் காயம் ஏற்பட்டது. அந்த பிரச்சனை அவருக்கு இன்னும் சரியாகவில்லை.
ஸ்டெய்ன் எப்படி
இது அவரின் உலகக் கோப்பை போட்டியிலும் வெளிப்பட்டது. அதேபோல் தென்னாப்பிரிக்காவின் இன்னொரு வீரர் ஸ்டெய்ன் பெங்களூர் அணியில் ஒரே ஒரு போட்டியில் விளையாடி , பின் காயம் காரணமாக வெளியேறினார். இவர் இதனால் உலகக் கோப்பை அணியில் இடம்பெற முடியவில்லை. இதுவும் தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இது போக ஐபிஎல் போன்ற பணம் கொழிக்கும் தொடர்களில் விளையாடத்தான், கடந்த வருடம் ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேரடி குற்றச்சாட்டு
இதை தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஸ்டெய்ன் நேரடியாக குற்றச்சாட்டாக வைத்து இருக்கிறார். ஐபிஎல் போட்டிக்கு செல்ல வேண்டாம் என்று ரபாடவிடம், இப்போது எங்கள் தோல்விக்கு அது பெரிய காரணமாகிவிட்டது கூறினேன், என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் ஐபிஎல் போட்டியில்தான் வார்னர், ஸ்மித், கெயில் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பார்மிற்கு வந்து சிறப்பாக ஆடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.