அட
இந்த போட்டி தாமதமாகும் என்று தெரிந்தவுடன் கிரிக்கெட் வீரர்கள் பெவிலியனில் அமைதியாக டீ குடிக்க தொடங்கிவிட்டார்கள். மைதானத்தை வெறித்தபடி, இந்திய அணியின் வீரர்கள் எல்லோரும் டீ, காபி குடித்தபடி நின்று கொண்டு இருந்தனர். எல்லோரும் ஒரே மாதிரியான மப்ளர் அணிந்து, தலையை ஹூட் மூலம் மூடி அமர்ந்து இருந்தனர்.
இவர் மட்டும் கொண்டாட்டம்
இதில் ஜடேஜா மட்டும் கவலையே இல்லாமல் கொண்டாட்டமாக இருந்தார். அதேபோல் அணியில் இடம்பெறாமல் காயம் பட்டு இருக்கும் தவானும் எனக்கு என்ன பிரச்சனை என்று சந்தோசமாக இருந்தார். அவர்கள் இருவரும் அங்கும் இங்கும் நடந்து சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தனர்.
ரோஹித் வருத்தம்
ஒருவேளை மழை நின்று, இந்திய அணி பேட்டிங் செய்தால், ரோஹித் முதலில் களமிறங்க வேண்டி இருக்கும். இதனால் அவர் பிட்சை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். பிட்ச் எப்படி இருக்கும் , விளையாட முடியுமா என்று பெவிலியனில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்தார்.
கோலி வருத்தம்
அவருக்கு அருகில் கோலியும் நின்று கொண்டு இருந்தார். போட்டி தொடங்கினால் மழையால் போட்டி எப்படி பாதிக்கும். எத்தனை ஓவர்கள் குறைக்கப்படும் என்று பார்த்துக் கொண்டு இருந்தார். தோனிதான் இந்த சீனில் இல்லாத வீரர். கடைசி வரை அவரை பெவிலியனில் பார்க்கவே முடியவில்லை.
|
ஜடேஜா என்ன செய்தார்
தொடர்ந்து 2-3 கப் காபிக்கள் குடித்த ஜடேஜா பின் நேராக தவானிடம் சென்றார். தவானிடம் காபி கொடுத்தவர், பின் பிரெட்டை கொடுத்தார். அவர் அதை வாங்கவில்லை என்றதும், அவருக்கு வாயில் வைத்து ஊட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.