என்ன கேன் வில்லியம்சன்
இந்த நிலையில் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், இங்கிலாந்து வெற்றிபெற்றதற்காக ஐசிசி விதிகளை நாங்கள் குறை சொல்ல முடியாது. அந்த விதிகள் எல்லாம் முன்பே உருவாக்கப்பட்டுவிட்டது. அந்த விதிகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இதில் திடீர் என்று எல்லாம் மாற்றம் கொண்டு வர முடியாது.
வில்லியம்சன் என்ன சொன்னார்
இங்கிலாந்து அணி எப்படி வெற்றிபெற்றது ? பவுண்டரி மூலம் அவர்கள் வெற்றிபெற்றார்களா? எனக்கு அதெல்லாம் தெரியாது. என்ன நடந்து என்ன.. உணர்வுகள் கொஞ்சம் இப்போது அழுத்தமாக இருக்கிறது. இதை ஜீரணித்து கொள்ள கொஞ்சம் எங்களுக்கு கடினம்தான். இதை தாண்டி செல்வது கொஞ்சம் இயலாத காரியம்.
வில்லியம்சன் பேட்டி
எங்களுக்கு வருத்தம் இருப்பது உண்மைதான். பசங்க எல்லோரும் கொஞ்ச கஷ்டத்தில் இருக்கிறார்கள். நாங்கள் இந்த நாளுக்காக கடினமாக உழைத்தோம். இந்த வெற்றிக்கு இங்கிலாந்து முழு தகுதி பெற்றுள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது.
ஓவர் த்ரோ எப்படி
போட்டியில் நேற்று சில விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. ஒரு ஓவர் த்ரோ போட்டியை மாற்றிவிட்டது. ஆனால் அதற்கு எல்லாம் நாம் எதுவும் செய்ய முடியாது. இனிமேல் அதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும். அதற்கு நாம் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் குறை சொல்ல முடியாது.
வாய்ப்பு
நாம் எப்படி இருக்கிறோம் என்பது நம்முடைய உரிமை. நாம் ஜென்டில்மேனாக இருக்க விரும்பினால் அப்படியே இருக்கலாம். வேண்டாம் என்றால் ஜென்டில்மேனாக இல்லாமல் இருக்கலாம். இதுதான் நமக்கு வாழ்க்கை வழங்கி இருக்கும் வாய்ப்பு. நமக்கு எப்படி இருக்க விருப்பமோ.. எப்படி வாழ விருப்பமோ அப்படி வாழ்ந்துவிட்டு செல்ல வேண்டும், என்று உருக்கமாக குறிப்பிட்டார்.
செய்தியாளர்கள் என்ன
அவரின் இந்த பேச்சுக்கு பின் செய்தியாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஒரு கிரிக்கெட் கேப்டனை பார்த்து செய்தியாளர்கள் எழுந்து நின்று கைதட்டியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.