பேட்டிங்
நேற்று போட்டி முழுக்க தோனிக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை. தோனி அதிக பந்துகளை குடித்துவிட்டார் என்று நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தோனி கடைசி நேரத்தில் அதையும் தனது பேட்டிங் மூலம் சரி கட்டினார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி அவர் நல்ல இலக்கிற்கு கொண்டு வந்தார்.
கீப்பிங்
ஆனால் நேற்று அவர் கீப்பிங்கில் மோசமாக சொதப்பினார். வரிசையாக இரண்டு முறை பந்துகளை பிடிக்க முயன்று தோல்வி அடைந்தார். தேவையில்லாமல் பைஸ் பவுண்டரி இரண்டை விட்டார். போட்டி முழுக்க அவர் பந்தை சரியாக கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் நேற்று பெரிய சர்ச்சையானது.
|
ஆனால் என்ன
ஆனால் இதற்கும் அவர் நேற்று போட்டியிலேயே பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், நேற்று போட்டியிலேயே அசத்தலான கேட்ச் ஒன்றை அவர் பிடித்தார். பும்ரா போட்ட பவுன்சரில் மேற்கு இந்திய தீவுகளின் பிராத்வைட் அடித்த பந்தை பறந்து, தாவி கீழே விழுந்து தோனி பிடித்தார். இதன் மூலம் தோனியிடம் கவனம் இல்லை என்று கூறிய விமர்சனங்களுக்கு எல்லாம் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
கோலி என்ன
பிராத்வைட் இதனால் 1 ரன்னில் அவுட்டானார். இந்த கேட்சை பார்த்துவிட்டு கோலி வாவ் என்று கத்தினார். மைதானத்தில் இருந்த எல்லோரும் ஆச்சர்யத்தில் கூச்சல் போட்டனர். அதேபோல் ரோஹித் சர்மாவும் இது சூப்பர் கேட்ச் என்று வியந்து டிவிட் செய்து இருக்கிறார்.