For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்க பேட்தான் பிரச்சனைக்கு காரணம்.. கண்டுபிடித்து சொன்ன தோனி.. கடும் கோபத்தில் கோலி!

கோலி பயன்படுத்தி வரும் பேட்தான் நேற்று அவர் அவுட்டாக காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video

உங்க பேட்தான் பிரச்சனைக்கு காரணம்.. கண்டுபிடித்து சொன்ன தோனி

லண்டன்: கோலி பயன்படுத்தி வரும் பேட்தான் நேற்று அவர் அவுட்டாக காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தால் அவர் தற்போது செம கடுப்பில் இருக்கிறார்.

நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்ததிலேயே மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இதில் எப்போதும் போல இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 7வது முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இது இந்திய ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் எல்லோரும் மிகவும் அதிரடியாக ஆடினார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. கே எல் ராகுல் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார்.கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

இந்த போட்டியில் அதன்பின் இரண்டு முறை மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டது . 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

என்ன அவுட்

என்ன அவுட்

நேற்று விராட் கோலி மிகவும் அதிரடியாக ஆடி வந்தார். இவர் 65 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விராட் கோலி 77 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அமிர் பந்தில் அவுட்டாகி வெளியே சென்றார். ஆனால் உண்மையில் அவர் அந்த பந்தில் அவுட்டாகவில்லை.

இல்லவே இல்லை

இல்லவே இல்லை

கோலி அவுட்டாகாமல், பந்து பேட்டில் பட்டதாக நினைத்து வெளியேறினார். நடுவர் அவுட் கொடுக்காமலே இவர் அவுட் என்று நினைத்து, வெளியேறினார். பந்து அவர் பேட்டை கடந்து சென்ற போது டொக் என்று சத்தம் கேட்டது. அதேபோல் கோலியின் பேட்டும் லேசாக அதிர்ந்தது. இதனால் பேட்டில் பந்து பட்டதாக அவர் நினைத்தார்.

உண்மை என்ன

உண்மை என்ன

ஆனால் ரிப்ளேயில்தான் கோலி அவுட்டில்லை என்பது தெரிந்தது. இந்த நிலையில் கோலி பெவிலியன் சென்ற பின் அவரின் பேட்டை தோனி வாங்கி சோதனை செய்து பார்த்தார். அதன் பின் கோலியின் பேட்டில் ஹேண்டில் லூஸாக இருக்கிறது. அதனால் சத்தம் வருகிறது, அதனால்தான் பேட் ஆடியது என்பதை கண்டுபிடித்து தோனி குறிப்பிட்டார். இதை பின் கோலியும் சோதித்து பார்த்தார்.

கோபம் ஆனார்

கோலி மீண்டும் பேட்டை ஆட்டும் போது இதேபோல் சத்தம் வந்தது. இதைத்தான் அவர் பந்து பட்டது என்று நினைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த கோலி பேட்டை தரையில் சாத்து சாத்து என்று அடித்து உடைத்தார். இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியானது.

Story first published: Monday, June 17, 2019, 13:14 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
ICC World Cup 2019: Kohli bat issue made him out yesterday match against Pakistan, Dhoni gives him advice.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X