மிக மோசம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டு நாட்கள் நடந்தது. இந்தியாவிற்கு எதிராக 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை நியூசிலாந்து அணி அடித்தது. அந்த இலக்கை நோக்கி இந்தியா திணறி திணறி ஆடி வந்தது.
என்ன சொதப்பல்
நியூசிலாந்து பவுலர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். கோலி, ரோஹித், கேஎல் ராகுல் ஒரு ரன்களில் அவுட்டானார்கள். தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். பண்ட் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
என்ன சர்ச்சை
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பெரிய கேள்விக்குறியாக இருந்தது. கோலி அவுட்டான பின் பண்ட் இறங்கியதும், அதன்பின் பாண்டியா இறங்கியதும் இந்திய அணியில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இதுதான் நேற்று கோலியை கோபம் அடைய செய்ததாக கூறுகிறார்கள்.
|
ஏன் கோபம்
நேற்று கோலி அவுட்டான பின் பண்ட் இறங்கினார். அவர் அடித்து ஆட கூடிய வீரர். பொறுமையாக ஆட மாட்டார். ஆனால் அந்த மாதிரியான சூழ்நிலையில் மெதுவாக ஆடாது கூடிய வீரர்களைத்தான் களமிறக்க வேண்டும். ஆனால் நேற்று கோலி பெவிலியன் திரும்பும் முன் ரவி சாஸ்திரி பண்டை களமிறங்கினார். இதனால் கோலி சாஸ்திரியிடம் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சண்டை
ஏன் அவரை அனுப்புனீர்கள் என்று கோலி சாஸ்திரியுடம் கோபமாக சண்டை போட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. சாஸ்திரி இன்னும் சில நாட்களில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.