நேற்று நடந்தது
இந்த நிலையில் நேற்று நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணிதான் முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி பேட்டிங் இறங்கி வலுவான ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கலாம் என்று நினைத்தது.
ஆனால் என்ன நடந்தது
ஆனால் இலங்கை அணி நினைத்தது போல நடக்கவில்லை. லஹிரு திருமன்னே வந்த வேகத்தில் 4 ரன்களில் அவுட்டானார். அதன்பின் திமுத் கருணாரத்னே மட்டும் 52 ரன்கள் எடுத்தார். குசல் பெரேரா 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் எல்லோரும் வரிசையாக சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
என்ன ஸ்கோர்
இதனால் 29.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இலங்கை அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிக எளிதான ஸ்கோர் என்பதால் நியூசிலாந்து அணி மிகவும் தன்னம்பிக்கையாக இறங்கி விளையாடியது. அந்த அணி, 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி எளிதாக 137 ரன்களை எடுத்தது.
சூப்பர் சம்பவம்
இந்த போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்த போதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. குசல் பெரேரா அப்போது ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது நியூசிலாந்து வீரர் போட்ட பந்து சரியாக ஆப் ஸ்டம்பை பதம் பார்த்தது. வேகமாக வந்த பந்து ஸ்விங் ஆகி ஆப் ஸ்டம்ப் மீது பட்டது.
|
ஆனால் இல்லை
ஆனால் நியூசிலாந்து வீரர்கள் எதிர்பார்த்தது போல விக்கெட் விழவில்லை. பந்து ஸ்டம்பில் பட்டும் கூட , பெயில்ஸ் கீழே விழவில்லை. இதனால் அம்பயர் விக்கெட் கொடுக்கவில்லை. அதேபோல் ஸ்டம்பில் லைட்டும் எரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் அதிர்ச்சி
ஆனாலும் இந்த சம்பவம் நியூசிலாந்து வீரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தொடரில் அடிக்கடி இப்படி நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பெயில்ஸ்களுக்கு எதிராக நிறைய பேர் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். பெயில்ஸ் எளிதாக கீழே விழும் வகையில் அதை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.