மழை பெய்தால்
இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஆனால் போட்டி முழுக்க மழை பெய்யாது. போட்டி தொடங்கும் முன் சில மணி நேரம் மழை பெய்யும். அதன்பின் போட்டிக்கு பாதியில், இந்திய நேரப்படி 7 மணிக்கு மேல் அங்கு மழை பெய்யலாம் என்கிறார்கள்.
பிட்ச் மாறும்
ஒருவேளை மான்செஸ்டரில் இன்று மழை பெய்தால், அதனால் பிட்ச் பெரிய அளவில் பாதிக்கப்படும். மழை பெய்யாமல் இருந்தால் பேட்டிங் செய்ய பிட்ச் சாதகமாக இருக்கும். ஆனால் மழை வந்தால் கண்டிப்பாக நியூசிலாந்து பவுலர்களுக்கு பிட்ச் ஏதுவானதாக மாறும். இங்குதான் இந்தியாவிற்கு முதல் சிக்கல் காத்து இருக்கிறது.
இரண்டாவது சிக்கல்
போட்டிக்கு இடையில் மழை விட்டு விட்டு வந்து, போட்டி தாமதமாக தொடங்கினால் அது இன்னும் பிரச்சனையாகும். போட்டி தாமதமாக தொடங்கினால் டிஎல்எஸ் முறை பின்பற்றப்படும். அப்படி நடந்தாலும் கூட இந்திய அணிக்குத்தான் சிக்கல். ஏனென்றால் டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டால் ஒரு ஓவருக்கு இந்திய அணி 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
7 ரன்கள் முடியாது
ஆனால் மான்செஸ்டர் மைதானத்தில் ஓவருக்கு 7 ரன்கள் அடிப்பது என்பது சிரமமான காரியம் . முக்கியமாக நியூசிலாந்து அணி கூட 45 ஓவர்களில் 4 ரன் ரேட் மட்டுமே வைத்து இருந்தது. இந்த மழை காரணமாக இன்னும் மோசமாக பிட்ச் மாறும். அப்படி நடந்தால் இந்திய ஓவருக்கு 6 ரன்கள் அடிப்பதே கஷ்டமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளி விவரம்
அதேபோல் இந்த மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் சேசிங் செய்யும் அணி 95% தோல்வியை தழுவி இருக்கிறது. முக்கியமாக சேசிங் செய்யும் அணி எப்போதும் 6 ரன்ரேட்டை கடந்தது இல்லை. இங்கு இரண்டாவது பேட்டிங் இறங்கும் அணி பெரும்பாலும் 250 ரன்களை எடுப்பதே பெரிய சிரமமான காரியம்.
இந்தியா வெற்றி
இங்குதான் நியூசிலாந்தை சேசிங் செய்ய முடியாமல் மேற்கு இந்திய தீவுகள் தோல்வி அடைந்தது. அதேபோல் இங்குதான் பாகிஸ்தான் இந்தியாவிடம் சேசிங் செய்யும் போது தோல்வி அடைந்தது. அன்றும் மழை பெய்தது. இதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக திரும்ப பெரிய வாய்ப்புள்ளது.