என்ன சிக்கல்
இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்ய பயன்படுத்தப்படும் யோ யோ டெஸ்ட் முறைதான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இந்த டெஸ்ட் முறையை தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டும் கடைபிடித்து வருகிறது. அவர்களும் இந்த டெஸ்ட் முறையை கைவிடும் எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி இது
இந்திய அணியில் விளையாட யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறை வைக்கப்படுகிறது. இது மிகவும் கடினம். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். அப்போது வரிசையான இடைவெளியில் பீப் சத்தம் கேட்கும். ஒவ்வொரு பீப் சத்தம் கேட்கும் போது ஓடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இதில் வெற்றி பெற்று பிட்னஸை நிரூபிப்பது மிகவும் கடினம்.
முடியவில்லை
இதில் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் பிட்னெஸை நிரூபிக்க முடியும். இதில் தற்போது மனிஷ் பாண்டேதான் அதிக மதிப்பெண்களை கொண்டு இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக கோலி அதிக மதிப்பெண் கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த டெஸ்ட் முறையில் நிறைய சிக்கலான விஷயங்கள் இருக்கிறது .
என்ன சிக்கல்
அதன்படி இந்த டெஸ்ட் காரணமாக உடல் தகுதியை நிரூபிக்கும் வீரர்கள் பார்மில் இருப்பது இல்லை. பார்மில் இருக்கும் வீரர்கள் இதில் வெற்றிபெறுவது இல்லை. இந்த டெஸ்டில் வெற்றிபெறுவதற்கு பார்மில் இருப்பதற்கும் தொடர்பில்லை. இதனால் இந்த டெஸ்டில் வெற்றிபெற்று அணிக்கு வரும் கே எல் ராகுல் போன்ற வீரர்கள் சரியாக விளையாடுவது கிடையாது. இதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது.
எப்படி பிரச்சனை
அதன்படி இந்த டெஸ்ட் மூலம் உடல் தகுதியை நிரூபித்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், கே எல் ராகுல், கேதார் ஜாதவ் யாரும் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. இதனால் இந்த டெஸ்ட் முறையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. வேறு ஏதாவது ஒரு முறைப்படி அணியில் வீரர்களை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
அதுதான் சரி
வீரர்களின் பார்மை சோதிக்கும் விதமாக டெஸ்டுகளை வடிவமைக்க வேண்டும். பார்மில் இல்லாத வீரர்கள் களத்தில் இறங்கி காயம் பட்டு அணிக்கு ஏமாற்றம் அளிப்பதற்கு நல்ல டெஸ்ட் முறையை வடிவமைக்கலாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.