ஐசிசி எதிர்ப்பு
இந்த தொடருக்கு ஐசிசி, பிசிசிஐ இரண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. இதில் இணைந்ததால் கபில் தேவை கூட, பிசிசிஐ பதவியில் இருந்து காலி செய்து வீட்டிற்கு அனுப்பியது. இதில் விளையாடியதால் அம்பதி ராயுடுவை இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்தது. அவர் பீக்கில் இருந்த நேரத்தில் இதனால் சிக்கலுக்கு உள்ளானார்.
என்ன சிக்கல்
அதன்பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இவர் அடையாளம் காணப்பட்டார். இந்திய அணிக்காக 35 போட்டிகளில் விளையாடினர். கடைசியாக உலகக் கோப்பை போட்டிக்கு இவர் தேர்வாக போகிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இவருக்கு பதில் விஜய் சங்கர் தேர்வானார். இதற்கு விஜய் சங்கர் ஒரு 3டி வீரர், நன்றாக ஆடுவார் என்று தேர்வு வாரியம் பதில் சொன்னது.
என்ன கிண்டல்
இதை அம்பதி ராயுடு கிண்டல் செய்து இருந்தார். நான் உலகக் கோப்பை போட்டியை 3டி கண்ணாடி அணிந்து கொண்டு பார்ப்பேன் என்று கிண்டல் செய்தார். இதுதான் பிசிசிஐ அமைப்பை சீண்டியது. எங்களையே கிண்டல் செய்கிறார் இவர் என்று கோபம் கொண்டது. இதனால் விஜய் சங்கர் காயம் அடைந்த போதும் கூட அம்பதி ராயுடுவை பிசிசிஐ அழைக்கவில்லை. அதற்கு பதிலாக ரிஷப் பண்டை அழைத்தது.
மோசம்
இதன் பின் இந்திய அணிக்குள் மயங்க் அகர்வால் கொண்டு வரப்பட்டார். இது ராயுடுவிற்கு இன்னும் கோபத்தை அளித்தது. இந்த நிலையில் நேற்று போட்டியில் ரிஷப் பண்ட் மிகவும் அதிரடியாக ஆடினார். இவர் 48 ரன்கள் எடுத்தார். இதனால் 4வது இடத்திற்கு நிலையான வீரராக பண்ட் தேர்வாக போகிறார் என்று கூறுகிறார்கள். இந்த போட்டிக்கு பின்பே அம்பதி ராயுடு தனது ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
அவ்வளவுதான்
அம்பதி ராயுடுவின் கதை முடிந்தது. அவரால் அணிக்குள் வர முடியாது என்று நேற்றே பலர் விமர்சனம் செய்து இருந்தனர். தற்போது தொடர் விமர்சனங்கள், புறக்கணிப்புகளால் மொத்தமாக சர்வதேச போட்டிகளில் இருந்து அம்பதி ராயுடு ஓய்வை அறிவித்துள்ளார்.